மூப்பு வந்தாலே………..

இரா.விஜயகௌரி
யாப்பில் எழுதும் விதி -இது
மூப்பின் முனகல் ஒலி
முதுகை வளைத்தெழுந்து
மூலையில் ஒதுங்குதலோ

நாளும் உழைத்தவர்கள்்-தேனீ
போன்றலைந்து களம் கண்டு
விளைநிலப்பயிர் வளர்த்து -பின்
வித்தாய் மடிவதுவோ மூப்பில்

உடைத்து விடை தொடுப்போம்-எம்
உயர்வை உணர வைப்போம்
நம்மை நாமுணர்ந்து -நாணி
கூனி குறுகல் தவிர்ப்போம்

உணவும் பயிற்சி தன்னை_எம்
தினத்தின் வனப்பு என உணர்வோம்
தேடல் வாழ்வின் வளமையாக்கி
வாழும் வழியை வெல்வோம்

அனுபவத்திரட்டின் செழுமை
அருமை பட நாம் தெளிந்து
வியப்பில் மிரள வைத்தே
மூப்பை ரசித்தே சொல்வோம்

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading