” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மூப்பு வந்தாலே………..

இரா.விஜயகௌரி
யாப்பில் எழுதும் விதி -இது
மூப்பின் முனகல் ஒலி
முதுகை வளைத்தெழுந்து
மூலையில் ஒதுங்குதலோ

நாளும் உழைத்தவர்கள்்-தேனீ
போன்றலைந்து களம் கண்டு
விளைநிலப்பயிர் வளர்த்து -பின்
வித்தாய் மடிவதுவோ மூப்பில்

உடைத்து விடை தொடுப்போம்-எம்
உயர்வை உணர வைப்போம்
நம்மை நாமுணர்ந்து -நாணி
கூனி குறுகல் தவிர்ப்போம்

உணவும் பயிற்சி தன்னை_எம்
தினத்தின் வனப்பு என உணர்வோம்
தேடல் வாழ்வின் வளமையாக்கி
வாழும் வழியை வெல்வோம்

அனுபவத்திரட்டின் செழுமை
அருமை பட நாம் தெளிந்து
வியப்பில் மிரள வைத்தே
மூப்பை ரசித்தே சொல்வோம்

Author: