மூப்பு வந்தாலே (731) 02.10.2025

செல்வி நித்தியானந்தன்.
மூப்பு வந்தாலே

முதுமை என்றாலே
முழுதாய் பயமும்
இளமை மறைந்து
இன்னலும் தொடரும்
காலத்தின் சக்கரம்
வேகமாய் செல்லும்
கோலத்தின் மாற்றம்
சோர்வாய் போகும்
நடையும் இல்லாது
வலியும் தோன்றும்
தூக்கம் மறந்து
பயத்தை தேடும்
மூப்பு நிலை என்றும்
முனகும் செயல் தொடரே
தீர்ப்பு அது இல்லை
தீர்க்க முடிவே வலியே?

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading