மூப்பு

ராணி சம்பந்தர்

மூப்பு வந்தாலே மாந்தரின்
இனிமையான இளமைக்குப்
பெரியதோர் ஆப்பு

இறப்பு ,பிறப்பு ,இளமை ,
முதுமை ,நரை இவையோ
இறைவனின் தீர்ப்பு

வயது போகப்போக அது இது
என எதைக் கண்டாலும் ஒரே
வெறுப்பு தம்மிலும் தவிப்பு

எப்போது எது நடக்கும் என்பது
யாருக்கும் தெரியாத ஒன்று
இரு துணையில் ஒருவரது
இழப்பு பெரியதோர் பாதிப்பு

இதுவோ ஒருவரை ஒருவர்
கொல்லும் தனிமையின்
பாரியதோர் பரிதவிப்பு

அதுவோ நித்திரையின்றித்
தவிக்க அனைவருடனுமே
பேசப் பழகத் துடிக்குமே
ஓர் உரிமைத் துடிப்பு .

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading