மூப்பு

ராணி சம்பந்தர்

மூப்பு வந்தாலே மாந்தரின்
இனிமையான இளமைக்குப்
பெரியதோர் ஆப்பு

இறப்பு ,பிறப்பு ,இளமை ,
முதுமை ,நரை இவையோ
இறைவனின் தீர்ப்பு

வயது போகப்போக அது இது
என எதைக் கண்டாலும் ஒரே
வெறுப்பு தம்மிலும் தவிப்பு

எப்போது எது நடக்கும் என்பது
யாருக்கும் தெரியாத ஒன்று
இரு துணையில் ஒருவரது
இழப்பு பெரியதோர் பாதிப்பு

இதுவோ ஒருவரை ஒருவர்
கொல்லும் தனிமையின்
பாரியதோர் பரிதவிப்பு

அதுவோ நித்திரையின்றித்
தவிக்க அனைவருடனுமே
பேசப் பழகத் துடிக்குமே
ஓர் உரிமைத் துடிப்பு .

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading