மூப்பு

ராணி சம்பந்தர்

மூப்பு வந்தாலே மாந்தரின்
இனிமையான இளமைக்குப்
பெரியதோர் ஆப்பு

இறப்பு ,பிறப்பு ,இளமை ,
முதுமை ,நரை இவையோ
இறைவனின் தீர்ப்பு

வயது போகப்போக அது இது
என எதைக் கண்டாலும் ஒரே
வெறுப்பு தம்மிலும் தவிப்பு

எப்போது எது நடக்கும் என்பது
யாருக்கும் தெரியாத ஒன்று
இரு துணையில் ஒருவரது
இழப்பு பெரியதோர் பாதிப்பு

இதுவோ ஒருவரை ஒருவர்
கொல்லும் தனிமையின்
பாரியதோர் பரிதவிப்பு

அதுவோ நித்திரையின்றித்
தவிக்க அனைவருடனுமே
பேசப் பழகத் துடிக்குமே
ஓர் உரிமைத் துடிப்பு .

Author:

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading