மொழியும் கவியும் (699)

Selvi Nithianandan

மொழியும் கவியும்

மூத்த மொழியானவரும் நீயே
மூதறிஞர்கள் சிறப்பித்ததும் தானே
மூலமே தாயானதும் பிறப்பே
முதலெழுத்தாய் மொழியான சிறப்பு

உலகமொழிகள் பலதுண்டு பாரினில்
உயிராய் மெய்யாய் உயிர்மெய் வடிவில்
உருவான மொழியும் பலதேகண்டு வியப்பில்
உருவகப் படுத்தலும் சிலதேயுண்டு களிப்பில்

இலக்கண இலக்கிய சொல்வளமுண்டு
இடைஉரி போல இதமும்முண்டு
இசை தரும் மொழியில் அழகும்முண்டு
இடர்படா நிலையில் கவியுமுண்டே.

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading