மொழியும் கவியும் (699)

Selvi Nithianandan

மொழியும் கவியும்

மூத்த மொழியானவரும் நீயே
மூதறிஞர்கள் சிறப்பித்ததும் தானே
மூலமே தாயானதும் பிறப்பே
முதலெழுத்தாய் மொழியான சிறப்பு

உலகமொழிகள் பலதுண்டு பாரினில்
உயிராய் மெய்யாய் உயிர்மெய் வடிவில்
உருவான மொழியும் பலதேகண்டு வியப்பில்
உருவகப் படுத்தலும் சிலதேயுண்டு களிப்பில்

இலக்கண இலக்கிய சொல்வளமுண்டு
இடைஉரி போல இதமும்முண்டு
இசை தரும் மொழியில் அழகும்முண்டு
இடர்படா நிலையில் கவியுமுண்டே.

Nada Mohan
Author: Nada Mohan