“மொழியே முகவரி”

நேவிஸ் பிலிப் கவி இல(658)

“அ “என்ற முதல் எழுத்தே தமிழ் மொழியின் முகவரியாய்
கல்லும் மண்ணும் தோன்றாக் காலத்தே
நல் வழி காட்டிய தாய்மொழி

அன்னையின் தாலாட்டில் கேட்டு
மூத்தோரின் பழமொழி வழி
நன்நெறிகள் கற்றுத்தந்த
உயிரான செம் மொழி

அழியாப் புகழ் கொண்ட அமுத மொழி
அறிஞர்கள் போற்றும் அகிலமே வியக்கும்
இலக்கண இலக்கிய வடிவம்
தமிழ் மொழியின் தனிச் சிறப்பாய்

எட்டுத் திக்கும் திசை மாறி
கண்டங்கள் தாண்டி தேசங்கள்கடந்து
வேற்று மண்ணில் வாழ்ந்தாலும்
கம்பீரமாய் உயர்த்தும் அடையாளமே
என் தாய் மொழி தமிழ்

யுகங்கள் கடந்தும்
இளமையோடும்்இனிமையோடும்
வாழும் தமிழ் மொழியே
முகவரியாம்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading