யோசி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-32
13-06-2024

யோசி

நாட்டிச் சென்ற நட்பையும்
விட்டுச் சென்ற உறவையும்
தொட்டுச் சென்ற இதயமும்
தீட்டிச் சென்ற ஆசானும்

பெற்றுச் சென்ற பெற்றோரையும்
ஊட்டிச் சென்ற உற்றாரையும்
உயிர் இருக்கும் வரை
யோசி பல முறை யோசி.

பாதையை மாற்றாதே
போதையை கிள்ளாதே
தேவை கண்டு உதவிடு
தெய்வமாய் ஒளிருவாய்

நீதியாய் பேசிடு
நின்று கேட்டு நடந்திடு
உனக்கு நிகர்
யாருமில்லை.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading