பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ கரையும் தண்ணீரில்,நிறையும் கழிவுகள் “கவி..ரஜனி அன்ரன்(B.A)30.03.2023

இயற்கை அன்னையின் கொடையினை
கண்டங்களை ஒன்றிணைக்கும் கடலினை
கப்பல் போக்குவரத்தின் தளத்தினை
கடல் வாணிபத்தின் களத்தினை
வாழ்வின் ஆதார வளத்தினை
கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக்கி
கரையும் தண்ணீரில் கழிவுகளை நிறைக்கின்றனரே !

கடலை ரசிக்க காலாற நடக்க
சுத்தக் காற்றைச் சுவாசிக்க முடியல
தொற்றுக்களும் விரைவில் பரவ
சுற்றுச் சூழலும் மாசடைய
எண்ணைக் கழிவுகளும் நிறைந்து வழிய
நெகிழிகளும் நெளியுது கடலிலே
கழிவுகளினால் அழிவுகளே மிச்சம் !

கடல்வாழ் உயிரினங்கள் அழிய
அரியவகை உயிர்களும் அருகிப் போக
நிறைகின்ற கழிவுகளால் அழிவே
நிலை தடுமாறுகின்றாள் புவித்தாயும்
கண்ணீர் வடிக்கின்றாள் கடல்த்தாயும்
உயிர்நீராம் தண்ணீருக்கு ஊறா?
ஊற்றான நீருக்கும் இங்கு கேடா?
நிறையும் கழிவுகளால் குன்றுதே வாழ்வும் !

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading