அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

ரஜனி அன்ரன்

“ கரையும் தண்ணீரில்,நிறையும் கழிவுகள் “கவி..ரஜனி அன்ரன்(B.A)30.03.2023

இயற்கை அன்னையின் கொடையினை
கண்டங்களை ஒன்றிணைக்கும் கடலினை
கப்பல் போக்குவரத்தின் தளத்தினை
கடல் வாணிபத்தின் களத்தினை
வாழ்வின் ஆதார வளத்தினை
கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக்கி
கரையும் தண்ணீரில் கழிவுகளை நிறைக்கின்றனரே !

கடலை ரசிக்க காலாற நடக்க
சுத்தக் காற்றைச் சுவாசிக்க முடியல
தொற்றுக்களும் விரைவில் பரவ
சுற்றுச் சூழலும் மாசடைய
எண்ணைக் கழிவுகளும் நிறைந்து வழிய
நெகிழிகளும் நெளியுது கடலிலே
கழிவுகளினால் அழிவுகளே மிச்சம் !

கடல்வாழ் உயிரினங்கள் அழிய
அரியவகை உயிர்களும் அருகிப் போக
நிறைகின்ற கழிவுகளால் அழிவே
நிலை தடுமாறுகின்றாள் புவித்தாயும்
கண்ணீர் வடிக்கின்றாள் கடல்த்தாயும்
உயிர்நீராம் தண்ணீருக்கு ஊறா?
ஊற்றான நீருக்கும் இங்கு கேடா?
நிறையும் கழிவுகளால் குன்றுதே வாழ்வும் !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading