ரஜனி அன்ரன்

பூக்குமா அமைதி ? கவி……ரஜனி அன்ரன் (B.A) 17.03.2022

வல்லரசு நாடொன்று
வல்லாதிக்க வெறி கொண்டு
எல்லைகளைப் பிடித்து
வெல்ல வேண்டுமென்ற அவாவில்
அல்லும் பகலுமாய் அயல்நாட்டின் மீது
அகோரத் தாக்குதல்களை
வான் தரை கடலென்று நடாத்தி
குண்டுமழையைப் பொழிகிறது கோரமாக !

உச்சக் கட்டத்தில் வெடிக்குது உக்கிரப்போர்
இறந்தவர் பாதியாய் இருப்பவர் மீதியாய்
உயிரைக் கையில் பிடித்தபடி
அண்டை நாடுகளுக்கு தஞ்சம்தேடி
இடம்பெயர்கிறார்கள் மக்கள் இலட்சக்கணக்கில்
பூக்குமா அமைதி புலருமா விடியல் ?
போர்நிறுத்தம் தான் வந்திடுமா ?

ஐரோப்பிய நாடுகளும் அவலத்தில்
உலகே தவிக்குது பொருளாதாரத்தில் சிக்கி
எரிவாயு எரிபொருட்கள் எண்ணை விலையேற்றம்
அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு
அநியாயமாக இறக்கிறார்கள் மக்களும்
பூக்குமா அமைதி புலருமா விடியல் ?

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading