ரஜனி அன்ரன்

“ பசுமை “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 31.03.2022

இறைவன் அளித்த வரம்
இயற்கை தந்த அற்புதம்
பசுமையெனும் வளம்
செழுமை சேர்க்கும் திறன்
பசுமையின் செழிப்பு பாருக்கே வனப்பு !

நீண்ட நெடிய வானம்
விரிந்து கிடக்கும் பூமி
பரந்து இருக்கும் கடல்
உயர்ந்து நிற்கும் மலைகள்
ஆங்காங்கே சமவெளிகள் பள்ளத்தாக்குகள்
ஆறுகள் குளங்கள் ஏரிகள் நீர்நிலைகள்
அடர்ந்த வனங்கள் மரஞ்செடி கொடிகள்
அத்தனையும் மொத்தமாய் பசுமையின் வனப்பே !

பச்சைக் கம்பளம் விரித்த புல்வெளிகள்
இச்சை தரும் பச்சை வண்ணம்
மனதிற்கு இனிமையாய் மகிழ்வின் உச்சமாய்
புத்துணர்வைத் தருவது பசுமை
பூமியைப் பசுமையாக்க பசுமைஇயக்கம்
மக்களுக்கு பசுமையைப் புகட்ட பசுமைக்கட்சி
விவசாயத்தில் பசுமையைப் பேண பசுமைப்புரட்சி
பூமியின் வளத்திற்கு வனப்பு பசுமையே !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading