ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ பசுமை “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 31.03.2022

இறைவன் அளித்த வரம்
இயற்கை தந்த அற்புதம்
பசுமையெனும் வளம்
செழுமை சேர்க்கும் திறன்
பசுமையின் செழிப்பு பாருக்கே வனப்பு !

நீண்ட நெடிய வானம்
விரிந்து கிடக்கும் பூமி
பரந்து இருக்கும் கடல்
உயர்ந்து நிற்கும் மலைகள்
ஆங்காங்கே சமவெளிகள் பள்ளத்தாக்குகள்
ஆறுகள் குளங்கள் ஏரிகள் நீர்நிலைகள்
அடர்ந்த வனங்கள் மரஞ்செடி கொடிகள்
அத்தனையும் மொத்தமாய் பசுமையின் வனப்பே !

பச்சைக் கம்பளம் விரித்த புல்வெளிகள்
இச்சை தரும் பச்சை வண்ணம்
மனதிற்கு இனிமையாய் மகிழ்வின் உச்சமாய்
புத்துணர்வைத் தருவது பசுமை
பூமியைப் பசுமையாக்க பசுமைஇயக்கம்
மக்களுக்கு பசுமையைப் புகட்ட பசுமைக்கட்சி
விவசாயத்தில் பசுமையைப் பேண பசுமைப்புரட்சி
பூமியின் வளத்திற்கு வனப்பு பசுமையே !

Nada Mohan
Author: Nada Mohan