ரஜனி அன்ரன்

“ பசுமை “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 31.03.2022

இறைவன் அளித்த வரம்
இயற்கை தந்த அற்புதம்
பசுமையெனும் வளம்
செழுமை சேர்க்கும் திறன்
பசுமையின் செழிப்பு பாருக்கே வனப்பு !

நீண்ட நெடிய வானம்
விரிந்து கிடக்கும் பூமி
பரந்து இருக்கும் கடல்
உயர்ந்து நிற்கும் மலைகள்
ஆங்காங்கே சமவெளிகள் பள்ளத்தாக்குகள்
ஆறுகள் குளங்கள் ஏரிகள் நீர்நிலைகள்
அடர்ந்த வனங்கள் மரஞ்செடி கொடிகள்
அத்தனையும் மொத்தமாய் பசுமையின் வனப்பே !

பச்சைக் கம்பளம் விரித்த புல்வெளிகள்
இச்சை தரும் பச்சை வண்ணம்
மனதிற்கு இனிமையாய் மகிழ்வின் உச்சமாய்
புத்துணர்வைத் தருவது பசுமை
பூமியைப் பசுமையாக்க பசுமைஇயக்கம்
மக்களுக்கு பசுமையைப் புகட்ட பசுமைக்கட்சி
விவசாயத்தில் பசுமையைப் பேண பசுமைப்புரட்சி
பூமியின் வளத்திற்கு வனப்பு பசுமையே !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading