மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ மீளெழும் காலம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.06.2022

வரலாற்று ஏடுகளில் இருண்ட காலமாய்
கறைபடிந்த காலமாய் களப்பிரர் காலம் அமைய
எம் தேச வரலாற்றில் கோட்டாக்களின் காலமும்
கறைபடிந்த கரும்புள்ளியான இருண்ட காலமே
கடந்த காலங்கள் போரின் வடுக்களோடு கழிய
இன்றைய காலமோ பசி பட்டினியோடு நகருது
மீளெழும் காலம் வந்திடுமா? மீட்சி தான் கிட்டிடுமா ?

கடந்தகால அவலம் தந்த பரிசு
பூமிப் பந்தெங்கும் புலம் பெயர்வுகள்
சொந்த நாட்டிற்குள்ளேயே ஏதிலிகள்
இன்றைய காலம் இக்கட்டான காலம்
வரலாறு காணாத வங்குரோட்டுகள்
வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலைகள்
மீளெழும் காலம் தான் எப்போ ?
ஏக்கப் பெருமூச்சுடன் எம்மின மக்கள் !

பொருளாதார நெருக்கடிகள் பஞ்சம் பசி
வாழ்வாதாரம் சீர்குலைவு வீதிகளில் மக்கள்
வாழ வழி தெரியாது மீண்டுமாய் ஏதிலிகளாகி
நாடு நாடாய் அலைந்து
நாதியற்று கூடிழந்த பறவைகளாய்
மீண்டெழும் காலம் வந்திடாதோவென
முனகியபடி தொடர்கிறதே வாழ்வு !

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading