மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ பன்மொழிகளே பலம் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 29.09.2022

பன்மொழி போற்றும் புரட்டாதித் திங்கள்
பாங்குடனே விடைபெறும் வேளை
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாளாம்
புரட்டாதித் திங்கள் முப்பதாம் நாளை
பல்லுலகிற்கும் அறிவித்து மகிழுது ஐ.நா.மன்றும் !

எண்ணத்தின் வெளிப்பாடாகி சிந்தனையின் ஊற்றாகி
உணர்வின் கலவையாகி உன்னதமாகி
தொடர்பாடலுக்கும் பரிமாறலுக்கும் பாலமாகி
மொழியப்படுவதே மொழி
பன்மொழிக் கல்வி புரிதலை ஊக்குவித்து
நல்லுறவிற்கு வழி வகுக்குமே
வாழ்வியல் மொழி தாய்மொழி – என்
வாழ்விட மொழியோ டொச்மொழி !

பல்லின மக்கள் வாழும் புலத்து வாழ்வினில்
பல்லினக் கலாச்சாரமும் மிளிர
பன்மொழிகளை நாமும் கற்றால்
பலதையும் பத்தையும் அறியலாம்
பயனுறு வாழ்விற்கும் வலுவாகும்
பன்மொழிகளே எமக்குப் பலம்
பன்மொழிகளையும் கற்போம்
தாய்மொழியோடு வாழ்வோம் !

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading