Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ வெறுமை போக்கும் பசுமை “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 11.05.2023

பாரெங்கும் பரந்து விரிந்து
பசுமை உலகினை எமக்குத் தந்து
வெறுமை போக்கி வறுமை நீக்கி
சுத்தக் காற்றைச் சுவாசிக்கத் தந்து
சுற்றுச் சூழலையும் பாதுகாத்து
பொருளாதார மேம்பாட்டிற்க்கும் பங்காற்றி
சாமரம் வீசிடும் தாவரம் வாழ்வின் ஆதாரமே
பிள்ளை போல பேணுகிறான் உழைப்பாளியும் !

உண்ண உறங்க இளைப்பாற
உலகிற்கே பசுமையைத் தரும் தாவரங்கள்
எம் வாழ்விற்கு கிடைத்த மா – வரங்கள்
உலகின் குடையாகி உயிரினங்களின் புகலிடமாகி
உயிருக்கு மூச்சாகி உதரத்தின் பசிபோக்கி
உயிரினங்களை வாழ வைக்கும் தாவரங்களை
உன்னதமாய் காத்து வளர்க்கிறான் உழைப்பாளியும் !

உணவிற்கு ஊட்டச்சத்துக்கு நறுமணத்திற்கு
மருத்துவத்திற்கு மரத்தளபாடங்களுக்கு
அழகிற்கு அலங்காரங்களுக்கு என
அற்புத பலன்களை அள்ளித் தரும் தாவரங்களை
ஆரோக்கியம் பேணி வளர்த்து
பங்கசுக்கள் பூச்சிகள் தாக்காது
பாதுகாப்போம் கடமை உணர்வோடு !

Nada Mohan
Author: Nada Mohan