மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ரஜனி அன்ரன்

எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே ! கவி…ரஜனி அன்ரன் (B.A) 08.06.2023

மொழியின் மூலம் எழுத்தே
எழுத்தின் வித்தே மொழிக்கு ஆதாரம்
இலக்கினை நோக்கிய பயணமதில்
எழுத்தோடு பூத்தது முதல்ஒலி
எழிலோடு பதித்தது தடம்
எழுத்தினை விதைத்து வித்தினைப் பதித்து
விருட்சமாகி விழுதுகள் தாங்கி
விசாலமாகி பூத்துக் குலுங்குது தமிழ் !

பாமுகத் தோப்பு பலரது இணைப்பு
இளையவர் தொகுப்பு
இனிமைத் தமிழின் தொடுப்பு
இணைய வழியும் கைகொடுப்பு
இதனால் பல்கிப் பெருகியதே படைப்பு
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழ் !

புலத்திலே பூத்தது எழுத்திலே முதல்ஒலி
பாரெல்லாம் ஒளிருது பாமுக ஒலிஒளி
புலத்திலே தனித்துவம் எழுத்திலே மகத்துவம்
படைப்புக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் தனிரகம்
அர்ப்பணிப்போ ஆயிரமாயிரம்
ஆக்கங்களின் உருவாக்கமோ பல்லாயிரம்
அத்தனையும் பதியங்கள் ஆகா இதுவல்லோ அதிசயம்
எழுத்திலே பூத்திட்ட எழிலான காவியம் !

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading