பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ரஜனி அன்ரன்

“ தமிழுக்காய் உயிர்துறந்த தாவீதுஅடிகள் “ ரஜனி அன்ரன் (B.A) 29.06.2023

உயிருக்கு மேலான தமிழுக்கு
ஊறு வந்த போது
உயிரையே துறந்தவர் தாவீது அடிகள்
ஆனித்திங்கள் இருபத்தியெட்டில் உதித்து
சென்பற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி பயின்று
இலண்டன் பல்கலைக் கழகத்தில்
கலைமாணி முதுமாணி பட்டங்களையும்
கலாநிதிப் பட்டத்தினையும் பெற்ற கல்விமான் !

முப்பத்தியிரண்டு மொழிகளை அறிந்த
மொழி ஆராட்சி அறிஞன்
ஏழை எளியோர்க்கு நல்லதொரு வழிகாட்டி
கைவிடப்பட்டோரைக் கைதூக்கி
அருளையும் பொருளையும்
அள்ளிக் கொடுத்த வள்ளல் !

எளிமையும் தாழ்மையும் கொண்ட
மனித நேயத்தின் மானிடன்
ஆண்டவனை நேசித்த புனிதன்
ஒப்பியல் அகராதிக்கு ஆய்வினைச் செய்து
ஒப்பற்ற பணிகளை மேற்கொண்டு
உருவாக்கினாரே ஒப்பியல் அகராதியை
உயிரையும் துறந்தாரே தமிழுக்காய் !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading