பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

ரஜனி அன்ரன்

“நேயம்”…..கவி…..ரஜனி அன்ரன் (B.A) 17.08.2023

உயிரோடும் உயிர்ப்போடும் வாழ
உன்னதமானது நேயம்
நேசம் கொண்டு நேயம் காப்போம்
அறிவிருந்தும் ஆளுமை இருந்தும்
அதிகார பலம் இருந்தும்
நேயம் இன்றிய வாழ்வு
நேசமில்லா சுயநல வாழ்வே !

அவலக் குரல் கேட்டால்
துடித்தெழும் வேகமும்
ஆதரவுக் கரம் கொடுக்கும் இணைவும்
ஆபத்தில் கை தூக்கிவிடும் நேயமும்
மனிதநேயப் பண்புகள்
நேயம் காப்போம் நேசத்தோடு !

பொன்னைப் பொருளை மண்ணைத் தேடி
அலைந்து திரிகிறான் மனிதன் இன்று
சொந்த பந்தம் சுற்றுச்சூழல் மறந்து
சுற்றித் திரிகிறான் சுயநலவாதியாய்
மனச்சாட்சியை விற்றுப் பிழைப்பு நடாத்தி
குளிர் காய்கிறான் மகிழ்வோடு
வாழ்வோம் நேயத்தோடு
மலரட்டும் எங்கும் மனிதநேயம் !

Nada Mohan
Author: Nada Mohan