இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ரஜனி அன்ரன்

தீர்வினைத் தருமா தற்கொலைகள் ?…..கவி….ரஜனி அன்ரன்(B.A) 14.09.2023

ஒட்டுமொத்த உலகினையும்
அச்சொட்டாய் ஆட்டிப் படைக்குது
தற்கொலை முடிவுகள்
ஒருவரின் சுயவிருப்பின் பேரில்
நொடிப்பொழுதில் எடுக்கும் விபரீதமே தற்கொலை
தற்கொலையை அறவே தவிர்க்க
ஆண்டு தோறும் செப்டெம்பர் பத்தாம் நாளை
தற்கொலைத் தவிர்ப்பு நாளாக்கியதே ஐ.நா.மன்றும் !

தோல்வி ஏமாற்றம் விரக்தி
தனிமை அச்சம் மனஅழுத்தமென
தற்கொலைக்கு காரணங்கள் பலவாக
உலகில் ஒரு வருடத்தில்
எட்டுலட்சம் தற்கொலைகள் அரங்கேறுதே !

கனவுகளைப் புதைத்து கடமைகளை மறந்து
எதிர்காலத்தை உதறித் தள்ளி
குடும்ப உறவுகளைத் தவிக்கவிட்டு
குறுகிய நொடியில் வெறுப்போடு எடுக்கும் முடிவு
தீர்வினைத் தான் தருமா ?
அமைதியான வாழ்வில் சூறாவளி வீசும் போது
தற்கொலையை நாடுகிறது மனங்கள்
தவிர்ப்போம் தற்கொலையை
கொடுப்போம் உசாத்துணையை !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading