மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ரஜனி அன்ரன்

தியாகமே தீர்ப்பானதா ? கவி…..ரஜனி அன்ரன் (B.A)…..21.09.2023

பட்டினி மறந்து பசித்தீயை ஒறுத்து
பன்னிருநாள் வேள்வியிலே
பற்றின பற்றால் மொழிப்பற்றால் இனப்பற்றால்
பாரே வியந்து நிற்க நாமும் பார்த்திருக்க
பற்றினான் தியாகத்தின் உச்சத்தை
பார்த்தீபனாம் எங்கள் அண்ணல்
பார்த்தீபனின் தியாகம் தீர்ப்பானதா?
பாராமுகமாக இருந்த பாரதமே பதில்சொல்லு !

ஆண்டுகள் முப்பத்தியாறு ஆனபோதும்
பார்த்தீபனின் தியாகமும்
சாத்வீகப் பயணமும்
சாத்தியம் ஆகவில்லை இன்னும்
தீராத பசியோடு தான் இன்னமும்
பார்த்தீபனின் தியாகமும் கனவானதே !

அறவழிப் போருக்கு அத்திவாரமிட்டு
அகிம்சையெனும் ஆயுதமேந்தி
தன்னை உருக்கி தீபமாய் ஒளிர்ந்து
தியாகியான பார்த்தீபனின்
தியாக நினைவேந்தலை நினைவுகூரவே
நீதிமன்றமே தடை போடும் போது
தியாகம் எப்படித் தீர்ப்பாகும் ?
தீர்ப்பும் இல்லை தீர்வும் இல்லையே !

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading