இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ரஜனி அன்ரன்

“ சுற்றுலா “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 28.09.2023

சுற்றுலா என்றாலே மகிழ்வு
மகிழ்ச்சியின் பெருஉலா சுற்றுலா
சுற்றுகின்ற பூமிதனில் – நாமும்
சுற்றி வருகிறோம் உலாவாக
வளரும் நாடுகளுக்கு பலமாக
வளர்முக நாடுகளுக்கு உரமாக
பொருளாதாரத்தின் மூலமாக
வருவாயை அள்ளிக் கொட்டுதே சுற்றுலா !

சுற்றுலாவைப் பேண ஐ.நா.மன்றும்
அமைத்துத் தந்ததே செப்டம்பர் 27ம் நாளை
அகில உலக சுற்றுலாத் தினமாக
அயராத உழைப்பில் அயர்வு சோர்வு நீங்க
இயந்திர வாழ்விற்கு விடுப்புக் கொடுக்க
குடும்ப வாழ்வில் ஒற்றுமை ஓங்க
குழந்தைகள் மனதில் குதூகலம் மலர
குடும்பமாய் சென்று வருதலே சுற்றுலா !

வாழ்வியல் பயணங்கள் வண்ணமாகி
வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தந்திடுமே
பண்பாட்டு விழுமியங்களை கலை ரசனைகளை
கண்குளிரக் கண்டு மகிழ்ந்து
சுற்றுலாவை மகிழ்வாக்குவோம்
புத்துணர்வு கொடுக்கும் அருமருந்து சுற்றுலாவே !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading