ரஜனி அன்ரன்

“ உலகின் நிலைமாற….கவி…..ரஜனி அன்ரன் (B.A) 04.01.2024

வருக வருக புத்தாண்டே
தருக தருக புதுமைகளை
உலகின் நிலைமாறிட
உள்ளங்கள் மகிழ்வாகிட
மனிதாபிமானம் மலர்ந்திட
மகிழ்ச்சி பொங்கிட
உன்வரவு நல்வரவாகட்டும் !

உலக அமைதியைப் பேணிட
கலகங்கள் எல்லாம் விலகிட
சபல புத்திகள் அகன்றிட
சந்தோஷச் சாரல் வீசிட
சுந்தர எழிலாய் வந்துவிடு புத்தாண்டே !

புத்தாண்டு மலர்ந்த வேளை
பூமியும் அதிர்ந்துவிட
பூகம்பமும் சுழற்றியடிக்க
மழைவெள்ளம் பெருக்கெடுக்க
அணைகளும் உடைப்பெடுக்க
மலர்ந்ததே புதிய புத்தாண்டு
மக்களைக் காப்பாற்று புத்தாண்டே
மகிழ்வினைக் கொடுத்துவிடு புத்தாண்டே
கற்கண்டாய் இனித்துவிடு புத்தாண்டே !

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading