மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ கவி….ரஜனி அன்ரன் (B.A) 08.02.2024

இரண்டாயிரத்தி இருபத்தி நான்கு
தேர்தல் ஆண்டாக மிரள வைக்குது உலகை
உலகில் எழுபத்தியாறு நாடுகள்
தேர்தலை எதிர்நோக்கி காத்திருப்பு
ஜனநாயகம் தான் ஜெயிக்குமா?
மக்களாட்சி தான் மலருமா ?
பொறுத்திருந்து தான் பார்ப்போம் நாமும் !

ஒட்டுமொத்த உலகும் எதிர்பார்த்திருக்க
சர்வதேச ரீதியில் பொருளாதார நோக்கில்
அரசியல் வணிகம் சார்பில்
தேர்தல் திருவிழா களைகட்டப் போகுதா?
போர்த்தாக்கம் பணவீக்கம்
கடன் பிரச்சினைகள் தான் ஒழியுமா?
கனவோடு காத்திருப்போம் நாமும் !

ஒருநாள் மகுடம் சூட
ஒற்றை விரலுக்கு மைபூசி
கற்றையாகப் பணத்தினை வாரியிறைத்து
தேர்தலில் வெற்றி பெறும்வரை
வாக்குறுதிகளை அள்ளிவீசி
வாக்குகளைப் பெற்றுவிட்டு
வாக்குப் போட்ட மக்களுக்கு
வேட்டும் வைப்பார்களே !

எத்தனை தேர்தல் வந்தாலும்
எத்தனை ஆட்சி மலர்ந்தாலும்
தேர்தல் திருவிழா தான் களை கட்டினாலும்
ஏழைகளின் வாழ்வு என்றும் கண்ணீரிலே !

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading