மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ காற்றின்வழி மொழியாகி வாழ்வு தந்தாய் “…..கவி…ரஜனி அன்ரன் (B.A) 15.02.2024

ஒற்றை மனிதனின் உருவாக்கம்
மாற்றான் தேசமதில்
காற்றலையாகி காற்றின் வழி மொழியாகி
தேம்ஸ்நதிக் காற்றோடு கலந்து
தேசமெல்லாம் தமிழ்மணம் பரப்புதே !

காற்றின் மொழியாகி காதோரம் வந்து
ஊற்றாகி உறவாகி உறுதுணையுமாகி
விழியாகி ஒளியாகி விடியல் தந்தாய்
உள்ளம் கவர்ந்தாய் இல்லம் தேடி வந்தாய்
வளம் தந்தாய் மொழியாகி வாழ்வும் தந்தாய்
கவிக்களமும் தந்தாய் கவி படைக்க !

வானொலி தேன் ஒலியாகி
தேசமெல்லாம் ஒலிக்குது
தேடலுக்கு வலுச்சேர்த்து
பெருக்கியது ஆற்றலை – உன்
படைப்புக்களும் தொகுப்புக்களும் ஏராளம்
பயன் பெற்றவரும் தாராளம்
தொழில் நுட்பத்திலும் அதிவேகம்
தொட்டு விட்டாய் இலக்கின் உச்சம் !

மார்க்கோனியின் மகத்தான கண்டுபிடிப்பு
ஹார்மோன்களுக்கு எல்லாம் மருந்தாச்சு
தனிமையைப் போக்கி தைரியத்தைத் தந்த
காற்றின் மொழியே காதலின் சுகமே – நீ
ஆற்றும் சேவையோ அளப்பெரிது
உனை வாழ்த்திட வார்த்தைகள் இல்லை
என்றும் வாழ்க பல்லாண்டு வளமோடு நீ !

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading