தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

ரஜிதா அரிச்சந்திரன்.

அன்பு..
கண்டேனே உன்னை கணமும் இறைபோலே
கொண்டேனே உயிர்களில் கொள்கையில்லா காதலை
விண்ணிலே மின்னுகின்ற விண்மீன்கள் போல
மண்ணிலேஎன் னுள்ளேமின் னாய்

காக்கை குருவி காட்டு விலங்குகள்
ஏக்கத்தை போக்கும் ஏதிலித் தன்மை
அழிக்கும் கங்குல் அன்பை விதைக்கும்
வழியினை காட்டுமேகாட் டில்

நாட்டில் நாமே நரகத்தை காட்டியே
தேட்டத்தில் குறியாய் தேங்கியே போகிறோம்
ஊட்டத்தில் நாட்டமின்றி கூட்டத்தில் கூவியே
ஏட்டில் எழுத்தாயுள் ளோம்

பூனையும் யானையும் பூரானும் நேசத்தை
தேனாய்ப் பருகி தெளிவாய் இருக்கத்தான்
வானை மிஞ்சும் அறிவை வளர்த்தநீயோ
ஊனை பிடுங்கித்தின் கிறாய்..!

கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன்.
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading