பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ரஜிதா அரிச்சந்திரன்

பச்சோந்தி.
பாலுக்கும் காவல் பதுங்குகின்ற பூனைக்கும்
ஞாலத்தில் நண்பனாகி நாலுபணம் சேர்க்கத்தான்
பாம்புபோல் தோலுரித்துப் பாரில் தினந்தோறும்
தாம்பல வர்ணம்காட் டும்

அற்பர் இனம்மதம் அன்பென்றே நாளலெ்லாம்
சொற்போர் நடத்துவார் சொர்க்கம் நரகம்
என்பார் முழுவதும் ஆவிதானே அகதிக்கு
நித்தம் எல்லாம்என் பார்

நிறையில்லார் தத்தளிப்பார் நிலையுமில்லா மாந்தர்
நிறையும ழிந்தினிமை யானநித்தி லத்தில்
கறையாக வாழ்வார் கருங்காலி போல்
மறைந்திருப் பார்பா ரிலே..!

-கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன்

Nada Mohan
Author: Nada Mohan