ரஜிதா அரிச்சந்திரன்

என்று தீரும்..

நித்தமும் நீர்த்திவலை நீந்தும் மேடான
உத்தமி கன்னங்கள் உருக்குலைந்து போகிற
வேளையிலும் ஏங்கிஏங்கி வேதனையில் உறைந்து
ஈழமண்ணை முத்தமிடு வாள்

என்ன பயன் ஏறெடுத்துப் பாராத
அன்பு வரண்ட அழுகிய ஊரில்
இருப்பியல் இன்பம் இனிமை தொலைத்த
கருத்து வரண்ட நிலம்

பச்சயம் வாடி பகலை இழந்து
அச்சத்தால் அலைந்து அமைதி இழந்து
தாழ்ந்து தலைசாய்ந்த தண்ணீர்ப்பா ரம்நிறைந்த
தாழைபோல் கலங்கிநின் றதே

அவளும் இவளும் அனாதை அன்பு
தவளும் உலகமீதில் தண்ணீர் குமிழி
போலாய் உடைந்துடைந்து பொலபொல வெனவே
ஓலமிடு கின்றன ரே

இந்நிலையில் துன்பியல் ஈயும் நிலத்திலே
அந்திப் பொழுதென ஆதவன் நித்தம்
எழாது இருட்டை எழிலாய் தரவே
அழலாய் எரியும் தினம்

– கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading