இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ரஜிதா அரிச்சந்திரன்

என்று தீரும்..

நித்தமும் நீர்த்திவலை நீந்தும் மேடான
உத்தமி கன்னங்கள் உருக்குலைந்து போகிற
வேளையிலும் ஏங்கிஏங்கி வேதனையில் உறைந்து
ஈழமண்ணை முத்தமிடு வாள்

என்ன பயன் ஏறெடுத்துப் பாராத
அன்பு வரண்ட அழுகிய ஊரில்
இருப்பியல் இன்பம் இனிமை தொலைத்த
கருத்து வரண்ட நிலம்

பச்சயம் வாடி பகலை இழந்து
அச்சத்தால் அலைந்து அமைதி இழந்து
தாழ்ந்து தலைசாய்ந்த தண்ணீர்ப்பா ரம்நிறைந்த
தாழைபோல் கலங்கிநின் றதே

அவளும் இவளும் அனாதை அன்பு
தவளும் உலகமீதில் தண்ணீர் குமிழி
போலாய் உடைந்துடைந்து பொலபொல வெனவே
ஓலமிடு கின்றன ரே

இந்நிலையில் துன்பியல் ஈயும் நிலத்திலே
அந்திப் பொழுதென ஆதவன் நித்தம்
எழாது இருட்டை எழிலாய் தரவே
அழலாய் எரியும் தினம்

– கவிஞர் ரஜிதா அரிச்சந்திரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading