ராஜேஸ்வரி நந்தகுமார் சின்ன பள்ளிகுப்பம் வளாகம்.இந்தியா.கவிதை.

சந்தம் சிந்தும் கவி இலக்கம் :25 கவிதை தலைப்பு : வாழ்க்கை

கொஞ்ச காலம் தஞ்சமடைய பூமியில் கற்றது

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் சிறப்பாக வாழ்வதே வாழ்க்கை!

சிறுவயதில் சிந்திக்க வில்லை! மகிழ்வுக்கு குறைவே இல்லை!

இனிப்பான பயணம்
சிறப்பாக இருக்க!

நடுவயதில் நாலும் புரிய
ஏற்ற இறக்கத்தை எட்டிப்பிடிக்க எல்லோராலும் முடியாது என உணர்ந்தேன்!

துயர்துடைக்க துணையின்றி கடவுளுக்கு கண்ணீரை காணிக்கையாக்கி

பொறுமையைக் கடைபிடித்து போன போக்கில் போக

முதுமை காலம் முட்டியது
மலரும் நினைவுகளோடு

மனதை ஆளும் திறனை கண்டு எதுவும் நிரந்தரமில்லை
என உணர்ந்தேன்!

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading