கவிதை என்றாலே….:

ரஜனி அன்ரன் ( B.A)….கவிதை என்றாலே…. 19.03.2026

அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம் கவிதை
விழிசொல்லத் துடிக்கும் வலிகளை
வலிக்காமல் வரிப்பது கவிதை
மனிதமனத்தின் சுவாசமே கவிதை !

வெறும்வார்த்தை ஜாலமல்ல
வெற்றுத்தாளின் கறுப்புப் புள்ளியில்
வீழும் கண்ணீர்த் துளியின் காவியம் கவிதை
சொற்களின் சாம்ராச்சியத்தில்
சொக்க வைக்கும் அதிசயம் கவிதை
வார்த்தைச் சிறைக்குள் சிக்கிக் தவிக்கும்
வண்ணத்து ஓவியம் தான்கவிதை !

பேனா முனையில் பிறக்கும்
பிரபஞ்சத்தின் இரகசியம் கவிதை
நினைவுப் பெட்டகத்தின்
நீங்காத காவியம் கவிதை
மொத்தத்தில் உள்ளத்தின் உணர்வில்
உணர்வின் தெறிப்பில் உயிர்ப்பாகுமே கவிதை !

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading