பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.07.23
கவி இலக்கம்-108
திருநங்கை

கருவிலே ஒரு மாற்றமும் இல்லை
இளம் பருவத்திலே தோற்றம்
மாறத் தொல்லையானது உறுப்பு

ஆண் பெண் ஆவதும்
பெண்ஆணாக உரு மாறுவதும்
இயற்கைக்கு மாறான
ஓமோன் சுரப்பு

எல்லோர் போலவும் அழகான பிறப்பு
சொல்லோரால் எரிச்சலான வெறுப்பு

ஆத்திரமான உருவ அமைப்பு
புரிந்தும் புரியாத உணர்வுகளில்
நாளுக்கு நாள் செத்துப் பிழைப்பு

கண்ணீர் வடியும் ஊமை மனதில்
காறித் துப்பும் மூஞ்சிகளின்
மிருகப் பிறப்பு

கை தொழும் ஆண்டவன் கூட
திரு ஆக ஒரு பாதி
நங்கையாக மறு பாதி

கண்டவன் கை தொடும்
திருநங்கையோ சீண்டியவன்
கை பட்டுப் புழுவாய்த் துடிக்க
என்ன பாவம் செய்தனரோ ?

Nada Mohan
Author: Nada Mohan