அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.07.23
கவி இலக்கம்-108
திருநங்கை

கருவிலே ஒரு மாற்றமும் இல்லை
இளம் பருவத்திலே தோற்றம்
மாறத் தொல்லையானது உறுப்பு

ஆண் பெண் ஆவதும்
பெண்ஆணாக உரு மாறுவதும்
இயற்கைக்கு மாறான
ஓமோன் சுரப்பு

எல்லோர் போலவும் அழகான பிறப்பு
சொல்லோரால் எரிச்சலான வெறுப்பு

ஆத்திரமான உருவ அமைப்பு
புரிந்தும் புரியாத உணர்வுகளில்
நாளுக்கு நாள் செத்துப் பிழைப்பு

கண்ணீர் வடியும் ஊமை மனதில்
காறித் துப்பும் மூஞ்சிகளின்
மிருகப் பிறப்பு

கை தொழும் ஆண்டவன் கூட
திரு ஆக ஒரு பாதி
நங்கையாக மறு பாதி

கண்டவன் கை தொடும்
திருநங்கையோ சீண்டியவன்
கை பட்டுப் புழுவாய்த் துடிக்க
என்ன பாவம் செய்தனரோ ?

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading