இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.08.23
கவி இலக்கம்-111
தலையீடு

தலையீடு சிலருக்குத் தாகம்
அடுத்தவன் செயலில் புகுந்து
உலையைக் கொதிக்க வைக்கும்
விவேகம்

அது இது படி எனப் பெற்றோர்
பிள்ளையை வற்புறுத்தும்
வேகம்

தோளிற்கு மேல் வளர்ந்தவரைத்
துருவித் துருவி பட்டப் படிப்பைக்
குழப்பிய சோகம்

விவாகம் ஆனவரைத் துரத்தித்
துரத்தி வேண்டாத வினையை
விலைக்கு வாங்கும் உற்றார்
உறவினர் மோகம்

கட்டிக் கொடுத்த பின்னும்
கொட்டிப் புழுங்கி முட்டி முட்டி
கட்டி ஆளும் தலையீடு

என்றென்றும் மாறாத
மாற்ற முடியாத பெரிய
தலையிடி தலையிடியே .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading