ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.08.23
கவி இலக்கம்-111
தலையீடு

தலையீடு சிலருக்குத் தாகம்
அடுத்தவன் செயலில் புகுந்து
உலையைக் கொதிக்க வைக்கும்
விவேகம்

அது இது படி எனப் பெற்றோர்
பிள்ளையை வற்புறுத்தும்
வேகம்

தோளிற்கு மேல் வளர்ந்தவரைத்
துருவித் துருவி பட்டப் படிப்பைக்
குழப்பிய சோகம்

விவாகம் ஆனவரைத் துரத்தித்
துரத்தி வேண்டாத வினையை
விலைக்கு வாங்கும் உற்றார்
உறவினர் மோகம்

கட்டிக் கொடுத்த பின்னும்
கொட்டிப் புழுங்கி முட்டி முட்டி
கட்டி ஆளும் தலையீடு

என்றென்றும் மாறாத
மாற்ற முடியாத பெரிய
தலையிடி தலையிடியே .

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading