இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

24.08.23
கவி இலக்கம் -280
என்று தீரும்

என்று தீரும் ஏக்கமான தாக்கம்
கொன்று குவியும் கொடூரம்
வென்றவுடன் நின்றுதான் போகுமா?

எத் திசையிலும் போராட்டம்
பெற்றிட முடியாத தீர்வின்
சீர் கேடுகள் என்றுந் தொடருமே

இனப் பிரச்சனையில் ஈரமான தமிழன்
அகதி மண்ணில் அகப்பட்டு
ஊமையாக்கிய நினைவுகள்

மெல்ல மெல்ல எழுந்தவன்
அல்லல்படடுத் துவண்டானே
ஆக்கிரமித்த அகோரமான
கொரோனாவால்

அக்கிரமமானது வேலையில்லாத்
திண்டாட்டம்
உக்கிரமமானது பொருளாதாரம்

வெந்த மேனியின் வலிகள்
வேதனையில் இதயம்
காயமதில் கழிவு நீர்
கசியாமல் போனதே

தொங்கிய பண நெருக்கடி
பொங்கியே சுருங்கி வெடித்த
மூச்சு

தாய் மண்ணில் வாழ வழியில்லை
நோய் நொடியால் வந்த இடத்தில்
நிம்மதியில்லை

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை
எப்போ ஓங்கிடும் என்று தீரும்
என்றும் தீருமா ?

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading