இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

05.09.23
கவி இலக்கம்- 113
விடுமுறை களிப்பு

விடுமுறை பலமுறை வந்திடினும்
இம்முறை மனதுக்கு களிப்போடு
விருந்தானது

தாய் மண்ணில் திரும்ப கால்
பதித்ததும் துருதுருவென
கண்ணும் ,காலும் ஓடியது

பிறந்த புகுந்த வீடு
வாழை,மிளகாய்த் தோட்டமும்

வாலாட்டும் நன்றி உள்ள ஜீவனும்
துள்ளி விளையாடும் ஆடு,பூனைக்
குட்டியும்
அன்றைய ஞாபகம் வந்திடுச்சு

நல்லூர், செல்வச் சந்நதி திருவிழாவில்
ஐஸ்கிறீம் உண்டு நா ஊறிடுச்சு

உற்றார்,உறவினர் ,ஆசிரியர் கண்டு
உறவாடியதில் இருந்த நோயெல்லாம்
பறந்திடுச்சு

இன்றோடு முடியுது விடுமுறை
என்றது எரிச்சல்

விடுமுறை களிப்பு மீண்டும்
எப்போது வருமென ஏக்கமுடன்
பெருமூச்சு எறிந்திடுச்சு இதயம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading