இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.11.23
கவி இலக்கம்-293
தீயினும் எரியாத தீபங்களே

துரோக வாழ்வில் நாதியற்ற
தமிழனுக்கு நீதி ஏது ஏது ?
தமிழனாய்ப் பிறந்ததின்
ஆணவ அக்கிரம அநீதி அது

மண்ணில் எழும் வினாவுக்கு
இன்றுவரை எந்த பதிலும்
இல்லாது வெறும் ஏதிலியாய்த்
திரிந்துதான் மீதி மீதி

கண்ணில் பட்டதை விண் தவிர
பாம்பு தின்னி சிங்கி சொங்க்கு
விற்றுத் தின்னும் பாதகரைக்
குடைந்தெடுத்து குழி தோண்டிட

தலைகீழாகப் போகும் தமிழன்
வாழ்வு நஞ்சுப் போதைக்கு
அடிமையாய் மிஞ்சிடும்
குஞ்சுச் சிறாராய்க் காக்க

மழைத்துளியில் முளைத்த
காளான் போல் ஒரு நொடியில்
துள்ளி எழுந்து வந்திடுவீர்
தீயினும் எரியா தீபங்களே .

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading