20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
25.05.23
கவி இலக்கம் -270
பொசுக்கிய தீயும்
பூத்திட்ட பொலிவும்
1981 மே 31 பன்னிரண்டு மணியளவில்
வக்கிர புத்தியில் எரித்தழிப்பு
சிங்கள வெறியரின் சதியில்
சீக்கிர இன ஒழிப்பு
பங்காளியின் வன்முறைக் கட்டவிழ்ப்பு
பெளத்த தேசியவாதிகளின் கொடுமையில்
அவிட்டு விடப்பட்ட கூட்டமைப்பு
காடையரின் கடுமையான கட்டமைப்பால்
பெளத்த நாடெனும் வெறியான
பூர்வீகப் படைப்பு
ஆதாரமும் ஆவணமும் இல்லாது
ஆக்கிய பழிதீர்ப்பு
வெட்ட வெட்டத் தழைக்குமே
குட்டக் குட்ட நிமிருமே என்று
பொசுக்கிய தீயில் எரித்து
நசுக்கியது போதும் என்றும்
விசுக்கிய நொடியில் புதைந்த
விதையே வீறு கொண்டு விருட்சமாய்
விழுது கொண்டதே புகழோடு
பூத்திட்ட பொலிவோடு மீண்டும் .
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...