நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பொங்கலோ பொங்கல்….
தைமகளின் வரவு
தரணியெங்கும் நிமிர்வு
வழிகாட்டும் தையாய்
வரும் எழிலின் மெய்யாய்
உழவன் நிலை உணர்த்தும்
உற்பத்தியை மதிக்கும்
உணவு வளம் பெருக்கும்
உணர்த்தி வலுப்படுத்தும்
அறுவடையின் செழிப்பில்
ஆதவனின் பங்கில்
அகிலமது நிறைக்கும்
பயரினத்துப் பயனே
பாரில் வாழும் உயிர்கள்
பசிபோக்கும் தென்பில்
படையலிட்டோம் பொங்கல்
பகலவனே நன்றி
பாரில் நீயே பரிதி
கூறும் நன்றி கோடி
யாதும் உனது கொடையே
பொங்கலிட்டும் பொங்கலோ பொங்கல்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan