மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வீறுகொள் விடியலே….

தகமை உரமிட தன்னிறைவு பலமிட
தண்ணொளி மிளிரும்
தரணியே மகிழும்
தன்னம்பிக்கை ஆற்றல்
பெண்ணினப் பெருமை
பேறுகொள் வரமே
மார்ச் எட்டு மகளிர் தினமே
மதியின் வலுவில் மாற்றத்தின்
உலகில்
எத்தனை புரட்சி எண்ணற்ற உயர்ச்சி
வலுப்பட வாழ்தலே வலிமையின் உறுதி
நேருக்கு நேராய் நிமிர்தலே தகுதி
பட்டங்கள் பலவென
பாடங்கள் அறிவென
சுட்டிட சுட்டிட பொன்னென ஒளிரும்
பட்டிட பட்டிட பாதைகள் புரியும்
அறிவின் வழியே அனர்த்தம் கழியும்
ஐக்கியத் தகமையில் அவனியாய் தாங்கி
உறங்கும் உரத்தின் இடுக்கண்
கலையும்
வழியின் வலியில் வற்றாத பொய்கை
வரங்கள் பலதை தாங்கிடும் அன்னை
காலம் போற்றிடும் காரிய மகிமையில்
ஞாலவிடியலில் நம்பிக்கை வேதம்
சாலச்சிறந்த சான்றிடை ஞானமே.
நன்றி. மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading