அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
பெண்ணே…
அகிலப் பரிதியின் அவதாரம்
ஆற்றும் செயல்களின் அத்திவாரம்
இல்லக் கோபுர ஒளிவிளக்கு
ஈகை அன்பின் முதலீடு
உள்ளச் செறிவின் உத்வேகம்
ஊற்றாய் பாசப் பிரவாகம்
ஐக்கியம் போற்றும் ஆதாரம்
ஒற்றுமைக் குடையின் அடித்தளம்
ஓங்கார சக்தியின் பிறப்பிடம்
வெற்றிடமற்ற தாய்க்குலம்
பெண்ணே பேறுகொள் பேராற்றல்
பெருமையுறு வாழ்வின் பெரும்பேறே.
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading