இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

அழியாத கோலங்கள்..
மண் வாசம் மறாத இதயத்தின் வருடல்
மறக்கவே முடியாத கூட்டுறவின் ஊடல்
தாயக முற்றத்தின் அழியாத கோலம்
ஆயிரமாய் கதைபேசும் அவலத்தின் காலம்
அனுதினமும் உறவாடும் அன்னை மண் வாழ்வு
முகவரியின் முழுமதியே எங்களின் ஊரு
அழியாத கோலத்தில் அதுவே தான் முதல் பதிவேடு!
சீராக்கி செதுக்கலிட்டு வாழ்க்கை அறம்
தந்தோர்
சீராட்டி வளர்த்தெடுத்த
சிற்பிகளே பெற்றோர்
நினைவிலொன்றி நிதமாக வரைகின்ற வாழ்வு அழியாத கோலமே அனுதினத்தின் பதிவு.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading