பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

அழியாத கோலங்கள்..
மண் வாசம் மறாத இதயத்தின் வருடல்
மறக்கவே முடியாத கூட்டுறவின் ஊடல்
தாயக முற்றத்தின் அழியாத கோலம்
ஆயிரமாய் கதைபேசும் அவலத்தின் காலம்
அனுதினமும் உறவாடும் அன்னை மண் வாழ்வு
முகவரியின் முழுமதியே எங்களின் ஊரு
அழியாத கோலத்தில் அதுவே தான் முதல் பதிவேடு!
சீராக்கி செதுக்கலிட்டு வாழ்க்கை அறம்
தந்தோர்
சீராட்டி வளர்த்தெடுத்த
சிற்பிகளே பெற்றோர்
நினைவிலொன்றி நிதமாக வரைகின்ற வாழ்வு அழியாத கோலமே அனுதினத்தின் பதிவு.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading