” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

அழியாத கோலங்கள்..
மண் வாசம் மறாத இதயத்தின் வருடல்
மறக்கவே முடியாத கூட்டுறவின் ஊடல்
தாயக முற்றத்தின் அழியாத கோலம்
ஆயிரமாய் கதைபேசும் அவலத்தின் காலம்
அனுதினமும் உறவாடும் அன்னை மண் வாழ்வு
முகவரியின் முழுமதியே எங்களின் ஊரு
அழியாத கோலத்தில் அதுவே தான் முதல் பதிவேடு!
சீராக்கி செதுக்கலிட்டு வாழ்க்கை அறம்
தந்தோர்
சீராட்டி வளர்த்தெடுத்த
சிற்பிகளே பெற்றோர்
நினைவிலொன்றி நிதமாக வரைகின்ற வாழ்வு அழியாத கோலமே அனுதினத்தின் பதிவு.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan