வசந்தா ஜெகதீசன்

அழியாத கோலங்கள்..
மண் வாசம் மறாத இதயத்தின் வருடல்
மறக்கவே முடியாத கூட்டுறவின் ஊடல்
தாயக முற்றத்தின் அழியாத கோலம்
ஆயிரமாய் கதைபேசும் அவலத்தின் காலம்
அனுதினமும் உறவாடும் அன்னை மண் வாழ்வு
முகவரியின் முழுமதியே எங்களின் ஊரு
அழியாத கோலத்தில் அதுவே தான் முதல் பதிவேடு!
சீராக்கி செதுக்கலிட்டு வாழ்க்கை அறம்
தந்தோர்
சீராட்டி வளர்த்தெடுத்த
சிற்பிகளே பெற்றோர்
நினைவிலொன்றி நிதமாக வரைகின்ற வாழ்வு அழியாத கோலமே அனுதினத்தின் பதிவு.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading