வசந்தா ஜெகதீசன்

கல்வி..
அறிவின் கடலாய் பரந்தது
ஆற்றல் மிகுதி நிறைந்தது
வற்றாச் சுரங்கத்தின் வலம்புரி
வளர்ச்சி குன்றா வளர்மதி
எங்கும் பேரொளி விருட்சமாய்
எதிலும் முதன்மை மகுடமாய்
தங்கு தடையற்ற தண்ணொளி
தாங்கும் அறிவின் சுடரொளி
உலகின் பிரகாச விளக்கொளி
உராய்ந்து புடமிடும் அறிவொளி
அளவுகோலற்ற அரியாசனம்
அறிவின் வித்தே பெரும்சாசனம்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading