29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
உயிர்க்கொடை…
வரலாற்று நாயகர்கள்
வலி சுமந்த காவியங்கள்
ஈழத்தின் வேங்கைகள்
இமயத்தின் இலக்குகள்
ஈகையின் தற்கொடைகள்
காலத்தின் கலங்கரைகள்
தமிழீழ மீட்பிற்காய்
தகர்ந்தழிந்தார் தமையீர்ந்தார்
சாவிலும் சரித்திரம் படைத்தவர்கள்-இவர்கள்
சாலவும் சிறந்திட்ட சான்றோர்கள்
தியாகத்தின் தீபங்கள்
விடுதலைக்காய் வித்தானோர்
உயிர்கொடையின்
உறவிவர்கள்.
கார்த்திகையின் காவியர்கள்.
ஈழத்தின் இமயங்கள்
ஈகையின் வேரிவர்கள்.
நன்றி
மிக்க நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.