பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உயிர்க்கொடை…
வரலாற்று நாயகர்கள்
வலி சுமந்த காவியங்கள்
ஈழத்தின் வேங்கைகள்
இமயத்தின் இலக்குகள்
ஈகையின் தற்கொடைகள்
காலத்தின் கலங்கரைகள்

தமிழீழ மீட்பிற்காய்
தகர்ந்தழிந்தார் தமையீர்ந்தார்

சாவிலும் சரித்திரம் படைத்தவர்கள்-இவர்கள்
சாலவும் சிறந்திட்ட சான்றோர்கள்
தியாகத்தின் தீபங்கள்

விடுதலைக்காய் வித்தானோர்
உயிர்கொடையின்
உறவிவர்கள்.
கார்த்திகையின் காவியர்கள்.
ஈழத்தின் இமயங்கள்
ஈகையின் வேரிவர்கள்.

நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading