29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
பனிப்பூ …
தூவு துகள்களாய் வீழ்ந்து குவிந்தது
தூரமெங்குமே வெள்ளை படர்ந்தது
அழகுப் புவியாய் அகத்தைக் கவர்ந்தது
அவனியெங்குமே பனிப்பூ நிறைந்தது
பாலர் கூடியே பனிப் பாவை ஆக்குவர்
பனியில் சறுக்கியே பாலர் மகிழுவர்
பூம்பனியின் லீலையில் பூக்கும் பரவசம்
கால மகிழ்விலே கரைந்து விலகுமே
உள்ளக்கமலமும் வெள்ளை நிறையுமா
உருகு பனியாய் அன்பில் குழையுமா
மனித நேயம் மன்றில் நிறையுமா
மனதின் நெருடல் மறைந்து விலகுமா
பனியின் படர்வில் பாரே அழகு
உராயும் அகத்தில் உண்மை நிறைவு.
நன்றி
மிக்க நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.