வசந்தா ஜெகதீசன்

பாமுகப் பந்தலிலே…
சிந்துமையில் சிந்தனைகள் ஏற்று
சிறப்புடன் ஈர்பத்து எழுத்தாணிக் கூட்டு
சிரத்தையுடன் பாமுகத்தில் விதைத்து
சிரமத்தின் வலியுடனே செதுக்கி
மலர் யாத்து
வீறுகொள் வெற்றிக்கெனக் காத்து
நாற்றிட்ட நறுமலர்கள் வாசம்
பாமுகத்துப் பூக்களென வீசும்
பாமுகத் தேட்டத்தில் ஒன்றாய்
பலரிணையும் கூட்டுறவுப் பதிவாய்
காத்திடத்தைக் காப்பாற்றும் மலரே
காட்டும் வழி ஆசானின் முயல்வு
நன்றி க்கு வித்தாகும் பதிவு.
நட்புடனே சாற்றுகிறோம் இணைவு.
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading