வசந்தா ஜெகதீசன்

விடியலின் உன்னதம்….
காசினிக்கு கதிரவனாய்
வாழ்வியலில் பெண்ணினம்
வளம் சேர்க்கும் உரிமையாய்
வண்ணத்து தூரிகை
உளவியலில் உழுது நிதம்
உரம் சேர்ப்பார் உறவாய்
அன்பினிலே விதையூன்றி
ஆர்ப்பரிப்பார் தாயாய்
ஆசனாய் உருமாறி
அறிவுரைப்பார் வளமாய்
தாதியாய் பணிசுமந்து
தனித்துவத்தைக் காப்பார்
பயணத்தின் வழிகாட்டி
பண்பாட்டின் முகவரி
கல்விக்கு உரமூட்டி
காசினியில் விடியல் தரும்
பெண்ணினத்துப் பெருமை
இல்லறத்தின் உடமை
ஈகைக்கு தகமை
உலகிற்கே விடியல்
உன்னதமே உயிர்ப்பு
தாய்மைக்குச் சிறப்பு
தகுந்த வரம் ஏற்று
தரணிவளம் காக்கும்
பெண்ணினத்துப் பேறே
பெருமைக்கு விடியல்
பேறுகொள் உன்னதமே
பெயர் பொறிக்கும் சரிதம்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading