18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
வசந்தா ஜெகதீசன்
தேடியவிழிக்குள் தேங்கியவலி….
காலத்தின் தோகை இருள்மூட
காணாமல் போனோர் வலிகூட
வதைபடும் உறவுகள் வலி ரணமே
வருவார் என்றிடும் உளம் கணம்
போரிடர் தந்த பேரிடர்
இரண்டாயிரம் நாளின் வலித்தொடர்
நலிந்து நலிந்து நூலாகி
நாள்பட்ட காயத்தின் ரணமாகி
உயிரின்றி ஊசலாடுகிறார்
உருக்குலைந்தே வாழ்வினை போக்குகிறார்
எத்தனை விம்பங்கள் எதிரொலியாய்
எதிர்ப்படும் முகங்கள் தம்முறவாய்
ஏங்கும் வாழ்வினைத் தாங்குவது
இடர்படும் நாட்கள் முள்ளாகி
எரிக்கும் உள்ளத்தின் அறைகூவல்
கேட்கும் எந்தன் தாய்நிலமே
கேள்விக்கு பதில் கூறாயோ
வாழ்விற்கு வழி செப்பாயோ
தேடியவிழி வலிக்கிறதே
தேசம்முழுதாய் துளைக்கிறதே
யாரென அறிவாய் நானிலமே
நாளையும் இதுவின்றி வாழவிடு
எங்கே தொலைத்தாய் எம்முறவை
வருவார் என்றிடும் வலி தணிய
வழியது தருமா வருங்காலம்.
நன்றி
Author: Nada Mohan
21
Dec
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பருவக் காலப் பாதிப்பிலே
பங்கு கண்டு பொங்குவாய்
உருவக் கோலச் சாதிப்பிலே
முங்கியபடியே மொங்குவாய்
கரும வினை...
20
Dec
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன்
சந்தகவி இலக்கம் _216
"பொங்குவாய்"
தை திங்கள் வந்ததடி தோழி
தரணிமெல்ல மகிழ்ந்தடி
ஆதவனார் வந்தாரடி!
பொங்கலிட்டோம்
பூஜை...
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...