இயற்கைவரமே இதுவும்கொடையே

VajeethaMohamed அ௫ள்பெற்ற ஆனந்தம் அனைத்து ௨யிர்களுக்கும் ஆதாரம் திரிவுகொள்ளும் ௨ம்செயல் திவ்வியம் அள்ளும் அமல் விந்தையோடு விளையாடும் அரம் வியப்போடு பார்கவைக்கும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்…
வளம் குன்றி வரட்சி காணும்
வற்றும் நீரால் அசுத்தம் சேரும்
ஆழி நீரை கழிவே ஆளும்
அழியா நெகிழி அதிகமாகும்
பலம் குன்றும் பாரில் கழிவு
பாதிப்பில் மனித வாழ்வு
நாமே செய்யும் நாசச் செயல்கள்
நானிலத்தின் வீழ்ச்சி விதைகள்
நாளை வாழ்வு வீழ்த்தலாகும்
வருமுன் காத்தல் மதியின் நுட்பம்
காடு கழனி அழித்தல் நிறுத்தி
கடும்கொடை நிலையை விலத்தி
நெகிழிப் பயன்பாடு தவிர்த்து
புவியின் காப்பில் அரணை அமைத்தால்
இயற்கைச் சூழல் இயல்பில் ஓன்றும்
மனிதவாழ்வை மதிநுட்பம் ஆளும்!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading