வசந்தா ஜெகதீசன்

கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்…
வளம் குன்றி வரட்சி காணும்
வற்றும் நீரால் அசுத்தம் சேரும்
ஆழி நீரை கழிவே ஆளும்
அழியா நெகிழி அதிகமாகும்
பலம் குன்றும் பாரில் கழிவு
பாதிப்பில் மனித வாழ்வு
நாமே செய்யும் நாசச் செயல்கள்
நானிலத்தின் வீழ்ச்சி விதைகள்
நாளை வாழ்வு வீழ்த்தலாகும்
வருமுன் காத்தல் மதியின் நுட்பம்
காடு கழனி அழித்தல் நிறுத்தி
கடும்கொடை நிலையை விலத்தி
நெகிழிப் பயன்பாடு தவிர்த்து
புவியின் காப்பில் அரணை அமைத்தால்
இயற்கைச் சூழல் இயல்பில் ஓன்றும்
மனிதவாழ்வை மதிநுட்பம் ஆளும்!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading