அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்…
வளம் குன்றி வரட்சி காணும்
வற்றும் நீரால் அசுத்தம் சேரும்
ஆழி நீரை கழிவே ஆளும்
அழியா நெகிழி அதிகமாகும்
பலம் குன்றும் பாரில் கழிவு
பாதிப்பில் மனித வாழ்வு
நாமே செய்யும் நாசச் செயல்கள்
நானிலத்தின் வீழ்ச்சி விதைகள்
நாளை வாழ்வு வீழ்த்தலாகும்
வருமுன் காத்தல் மதியின் நுட்பம்
காடு கழனி அழித்தல் நிறுத்தி
கடும்கொடை நிலையை விலத்தி
நெகிழிப் பயன்பாடு தவிர்த்து
புவியின் காப்பில் அரணை அமைத்தால்
இயற்கைச் சூழல் இயல்பில் ஓன்றும்
மனிதவாழ்வை மதிநுட்பம் ஆளும்!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading