26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
வசந்தா ஜெகதீசன்
தலைசாய்ப்போம் மனிதம் நிமிர வாழ்ந்தவருக்காய்…
காவியத்து நாற்றுக்கள்
கலங்கரையின் விளக்குகள்
இலக்கின் விழுமியங்கள்
இன்னுயிர் ஈர்ந்தவர்கள்
தவத்தின் புதல்வர்கள்
தன்னம்பிக்கை வி்த்துக்கள்
மனிதம் வாழ்ந்தொளிர
மாவீரர் கொடையானார்
ஈழம் மீட்டெடுக்க இன்னுயிர் தியாகம் செய்தார்
அகலொளித் தீபங்கள்
அறநெறி வியூகத்தில்
எண்ணற்ற மனிதமாய்
எண்திசையும் ஒளிர்கின்றோம்
வண்ணத்துப் பூச்சிகளாய்
வாழ்விலே மிளிர்கின்றோம்
கார்த்திகை வீரருக்கு காணிக்கை போதிடுமா
காலத்தில் செய்த உதவி
ஞாலத்தில் பெரிதன்றே
நாளுமே தலைசாய்ப்போம்
நன்றிக்கு வித்தாவோம்
பாரிலே தமிழினமாய்
பண்பாட்டு விழுதெறிவோம்
போரிலே பட்டதுயர் புறத்திலும்
அகத்திலும்
நேரிலே உயிரீர்ந்த உத்தமரின்
உளஉரமே
போற்றுதலும் சாத்துதலும்
தலைசாய்க்கும் தனிவீரம்.
மனிதத்தின் மாவீரம்!.
நன்றி
மிக்க நன்றி.

Author: Nada Mohan
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...
26
Jun
ஜெயம்
உலகம் அழகினை தேக்கிய கோளம்
கலகமோ நுழைந்தின்று அழிந்திடும் கோலம்
நீயா நானாவென நாடுகளுள்...