பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

திறக்குமா விழிகள்
திருந்துமா மனங்கள்?
வலிமை குன்றிடும் வாழ்வும் சிதைந்திடும்
அறியாமைத் தீயே அனலாய் எரிந்திடும்
நிறத்தின் கூறுகள் பாகுபடுத்திடும்
மனித வாழ்விலே நிதமும் உறவிடும்
வர்ணக்கோலமே நிறத்தின் பேதமே
உணர்வைக் கிள்ளியே உனக்குச் சொல்கிறேன்
ஒடும் குருதியில் வேறுபாடில்லை
உணர்வின் விழிப்பிலே மாறுபாடில்லை
நிறத்தின் பகுப்பிலே நிதமும் குன்றுவோர்
இருளும் மனதிற்குள் ஒளிரும் மனிதர்கள்

விழியின் ஆழியே விந்தை உன்னால் தான்
அழிவின் முன்னே நீ அகலொளியாய் விழித்திடு
நிறத்தில் வாழ்வில்லை திறத்தில் வாழ்வுண்டு
உராயும் மனங்களை உளிகள் செதுக்கட்டும்
திறக்கும் விழிகளில் திறமை ஜெயிக்கட்டும்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan